Pulikalinkural

Pulikalinkural

Pulikalinkural. Voiceoftamil, Tamil,

Tamil, Pulikalinkural, Voiceoftamil, புலிகளின் குரலில் ஆண்டு தோறும் நவம்பர் 27ஆம் நாள், தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை ஒலிபரப்பப்பட்டது. “தமிழர்பாடு”என்ற நிகழ்ச்சியில் யோகரத்தினம் யோகி அவர்களின் உரைகள் ஒலிபரப்பப்பட்டது. கருத்துக்களம் , உலகவலம், கருத்துப்பகிர்வு, செய்தி வீச்சு ,அகமும் புறமும், கணப்பொழுது, செய்தியறிக்கை , நாளிதழ் நாழி, மாற்றம் முதலான நிகழ்சிகள் சுவைபட ஒலிபரப்பப்பட்டன. தொடர் நாடகங்களும் இடம் பெற்றன , சாவு அறிவித்தல், வீரச்சாவு அறிவித்தல் , மாவீரர் பாடல், பள்ளிப்பிள்ளைகளுக்குப் பயன்தரும் நிகழ்சிகள் முதலானவை தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் இத்துணைச் சிறப்புகளுக்கும் அதன் பொறுப்பர் தமிழன்பனும் அவருடன் இணைந்து செயலாற்றிய போராளிகளும் பணியாளர்களுமே காரணமாக இருந்தனர். முள்ளிவாய்க்கால் முடிவு அன்று எனச் சொல்வதைப் போல , இன்றும் புலிகளின் குரல் தொடர்ந்து தான் சேவைகளை வழங்கி கொண்டிருக்கிறது. இணையத்தின் ஊடாக கடந்த 2004ம் ஆண்டில் ஒலிக்க தொடங்கிய , புலிகளின் குரல் வானொலி இன்று வரை உலகெங்கும் பறந்து வாழ்கின்ற தமிழர்களின் உள்ளங்களில் விடுதலை வேட்கையைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. புலிகளின்குரல் வானொலி தனது இலட்சியப்பாதையில் இருந்து சற்றும் விலகி செல்லாமல் இருப்பதற்கு தலைவன் வழியில் செயலாற்றிய போராளிகள் பணியாளர்கள் தான் காரணம். 2009ம் ஆண்டுக்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் ஒரு பக்கமாகவே நாம் இதனையும் பார்க்கின்றோம். எமது வானொலிக்கு நேர்காணல்கள் மற்றும் வாழ்த்துக்களை தர மறுத்த எந்தவொரு நபரையும் நம்பி புலிகளின்குரல் வானொலி ஒலிக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளின்குரல் வானொலியில் உங்களது நேர்காணல்கள் ஒலிக்கின்றபோது ஒரு தேசியத்தின் தனித்துவமான வானொலியில் உங்களது குரல்கள் ஒலிக்கின்றன என்று பெருமைப்பட வேண்டியது நீங்கள் தான்… உங்களது குரல்களால் எமது தேசிய வானொலிக்கு எந்த பெருமையும் சேரப்போவதில்லை என்பதை இத்த வேளையில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். எனவே தனி மனித செயற்பாடுகளை தவிர்த்து தேசியத்தின் வழி நின்று செயற்படும்போது எமது விடுதலை பயணம் இன்னும் வேகமாக செயற்படுத்த முடியும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எத்தனையோ பெரிய வெற்றிகளையும் எத்தனையோ சாதனை பயணத்தையும் மேற்கொண்டு ஒலித்து வரும் புலிகளின்குரல் வானொலியை இன்று வரை எதிரியாலும் துரோகியாலும் தடுக்க முடியவில்லை என்பது தான் எமது மாவீரருக்கு கிடைத்த வெற்றி. தொடர்ந்தும் புலிகளின்குரல் இணையத்தளம் இன்று புதிய பல வியங்களை உள்ளடக்கி உங்களின் பார்வையில் இயங்கும் என்பதையும் எமது நேரடி ஒலிபரப்பில் பாடல்கள் மாவீரர் மகுடம் நினைவூட்டல்கள் போன்றவை ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதையும் 25 ஆண்டுகளைக் கடந்தும் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பின் பயணம் இன்றும் தொடர்கின்றது என்பதை அறியத்தருகின்றோம். நன்றி- புலிகளின்குரல் நிறுவனம்
Access to this station's podcasts is not available or it does not provide any